![](http://3.bp.blogspot.com/-wXdgVw1-wX0/XCoC0f6G33I/AAAAAAAAAK4/jnN3kMBV1k4aOZ-2PMcaoaM37MctX08PgCLcBGAs/s200/Rajitha-Senerathna.jpg)
விசேடமாக புற்று நோய்க்குரிய அதிமுக்கியமான 200 வகை மருந்துகள் மற்றும் இருதய நோய்க்குரிய மருந்துகள், தற்போது நாட்டில் இல்லையென மருந்தக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்கில் இந்தகலந்துரையாடல் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுவரையில் நாட்டில் உற்பத்தி செய்யப்படாத சில அத்தியாவசிய மருந்துகளை இனிவரும் காலங்களில் இலங்கையிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையும், வெகு விரைவில் முன்னெடுக்கப்படும், என அமைச்சர் ராஜித சேனாரத்ன, நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன் மருத்துவ துறையில் காணப்படும் ஏனைய பிரச்சனைகளும் தாம், உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.