![](http://3.bp.blogspot.com/-hRkYxvQxaiw/XCtoAFgNPBI/AAAAAAAAANE/tM8fWZSpKrM4JGRzsaL_uFfkPmAWPzm6wCLcBGAs/s200/budget-2019_fastnews.png)
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த ஒதுக்கீட்டு சட்டமூலம் இந்த மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டு சட்டமூலம், அனைத்து அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும். அத்துடன் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் யோசனைகளை குறித்தும் ஆராயப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.