Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஆணைக்குழுவின் முதல்கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவு! தேவையான ஆலோசனைகளை வழங்கும் அதிகாரம் எமக்குண்டு-LLRC

$
0
0
பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் வடக்கில் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை கண்டறிய இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. காணாமல்போனோர் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளை ஆராயும் பணிகள் கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு இன்று நிறைவடைந்தது.

காணமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை சமர் ப்பிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு தமது முறைப்பாடுகளை சமர்ப்பிப் பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தில் விசா ரணைகள் இடம்பெறும் விதம் தொடர்பாக இன்று மாலை இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் காணமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவர் கருத்து தெரிவித்தார்.

காணமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவிக்கையில் சுமார் 152 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஏற்கனவே முறைப் பாடுகள் செய்தவர்களை தவிர புதிதாகமுறைப்பாடு செய்வதற்கும் பலர் வருகை தந்திருந்தனர். அந்த முறைப்பாடுகளையும் நாம் விசாரித்தோம்.

மேலும் புதிதாக முறைப்பாடுகளை செய்தவர்களுக்கு பிறிதொரு தினத்தை ஒதுக்கு வதாக நாம் தெரிவித்தோம். நாம் அவர்களுக்கு பதிவு தபாலில் அறிவிக்கவுள் ளோம். இதனை விசாரிப்பதற்கு அதிகாரம் இருந்தபோதிலும் தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை வழற்க எம்மால் முடியாது எமது அறிக்கையின் ஊடாக ஜனாதிபதியிடம் பரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியும். தேவையான ஆலோசனைகளை வழங்கும் அதிகாரம் எமக்குண்டு. தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை.

கற்றப்பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. காணாமல் போனோரின் உறவினர்கள் மன உளச்சலுக்குட்பட்டிருப்பதை ஜனாதிபதி தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>