
இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் உதயன் பத்திரிகை காரியாலயத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் அலுவலகத்திற்கு முன்னால் ரசிகர்களால் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தை இராணுவ புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டமாக உதயன் நித்தரிக்க முயல்வதாக விஜய் ரசிகார்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுதந்திரமான முறையில் தமக்கு விரும்பிய நடிகருக்கு ஆதரவாக செயற்படுவது குற்றமா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பில் தமது நடிகராகிய விஜய் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் இராணுவ புலனாய்வாளர்களால் இவ் ஆர்பாட்டம் நடத்தப்பட்டதாக காட்டி அனுதாபத்தை சர்வதேச ரீதியில் பெற உதயன் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இதே சூரியகாந்திப் பகுதியில் கடந்த வருடம் முற்பகுதியில் வன்னி மாணவர்களை மாடுகள் எனவும் புனித தலமான வற்றப்பளை ஆலயத்தை கொச்சப்படுத்தியும் உதயன் செய்தி வெளியிட்டு வடக்கில் பரவலாக உதயனுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.