
சில தரப்பினரிடம் 20 லட்சம் ரூபா வரையில் மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமது பிரதேசங்களில் உள்ள காவல்நிலையங்களில் முறையிட் டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த மோசடி குழு ஜா-எல – துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளனர். இதே வேளை மலேசியாவுக்கு தொழில்வாய்ப்பிற்காக செல்லும் அனைத்து இலங்கைய ர்களிடமும் தொழில் ஒப்பந்தம் மற்றும் மலேசிய அரசின் தொழில் வீசா அனுமதிப் பத்திரம் என்பன இருக்க வேண்டியது அவசியம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சில தரப்பினர் போலியான தகவல்களை வழங்கி மோசடியான வகையில் மலேசியாவுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுச் செல்வதாக பணியகத்தின் பிரதி முகாமையாளர் தெரிவித்தார்.