Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஜனாதிபதி மாடறுப்பை ஒரு வாரத்திற்குள் நிறுத்த வேண்டும்! சரிவராதுவிடின் 499 பேர் உயிர்த்தியாகம் செய்வோம்!!

$
0
0
சிங்கள ராவய ஜனாதிபதியை அச்சுறுத்துகிறது

நாட்டில் இடம்பெறும் மாடறுப்பு உட்பட மிருகவதையை ஒரு கிழமைக்குள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தடுத்து நிறுத்தாவிட்டால் இன்னும் 499 பேர் உயிர்த்தியாகம் செய்யவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிருகவதையை எதிர்த்து கடந்த வருடம் தலதா மாளிகையின் முன் உயிர்த்தியாகம் செய்த போவத்தே இந்திர ரத்ன தேரர் தெரிவித்தபடி தாம் ஒரு சங்கம் அமைத்துள்ளோம். அச்சங்கத்தில் 500 பேர் உள்ளனர். அதில் ஒருவரே மேற்படி இந்திரரத்ன தேரர். அவர் மிருகவதைக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்தார்.

இன்னும் ஒரு கிழமைக்குள் ஜனாதிபதி நாட்டில் இடம்பெறும் மிருகவதையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மீதமிருக்கின்ற 499 பேரும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிவரும் என மிருக வதைக்கு எதிராக கண்டியில் பாரிய ஆர்பாட்ட பேரணியை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கள ராவய அமைப்பு இன்று(09) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பித்த இப்பேரணி 16 ம் திகதி ஜனாதிபதி மாளிகையின் முன்பாக நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எந்தப் பாகத்திலும் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் சிங்கள ராவய அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ள நிலையிலும், சிங்கள ராவய அமைப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.

மேலும், இலங்கையில் பிறமத தடை சட்ட மூலம் உடன் கொண்டு வரப்பட வேண்டும். இலங்கையிலுள்ள முஸ்லிம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். மாடறுப்பு உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>