Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

என்றும் நாங்கள் பயங்கரவாதிகளிடமிருந்து வெற்றிகொண்ட நாளை கொண்டாடியே தீருவோம்! - ஜனாதிபதி மகிந்த

$
0
0
நாங்கள் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு சுதந்திரக் காற்றைப் பெற்று 5 வருடங்கள் ஆகியிருக்கின்றன. நாங்கள் பயங்கரவாதிகளிடமிருந்து வெற்றிபெற்றதைச் சகிக்க முடியாத சில மேற்கத்தேய நாடுகள் வீணாகக் குக்குரலிடுகின்றன. நாங்கள் வெற்றி விழாக் கொண்டாடுவதை எதிர்க்கிறார்கள். நாங்கள் இதற்கு முன்னர் துன்பத்தை அனுபவித்தபோது அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே இருந்தார்கள்” இவ்வாறு குறிப்பிட்டார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

இன்று (18.05.2014) மாத்தறையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும், பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த்தை நினைவு கூரும் ஐந்தாவது ஆண்டு நினைவு விழாவில் கலந்து கொண்டு (தற்போது) உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றும்போது -

இன்று வருட பயங்கரவாதம் இன்று இல்லை. நாங்கள் வெற்றி கொண்ட நாளை நினைவு கூரும் நாள் இது. இன்று எமது வாலிபர்களின் கழுத்தில் சயனைட் வில்லைகள் இல்லை.

அன்று இலங்கையில் தமிழ் இளைஞர்கள் பல்வேறு துன்பங்களையும் அனுபவித்தார்கள். தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தார்கள். இன்று பயங்கரவாதம் இல்லை. அன்று பயங்கரவாதம் இல்லாமலிலிருந்திருந்தால் எத்தனையோ உயிர்கள் இலங்கையில் இருந்திருக்கும்.

யார் என்ன சொன்னாலும், எப்படிச் சொன்னாலும் நாங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். தமிழ் மக்களுக்காக அல்ல.

வெளிநாட்டில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் மீண்டும் இலங்கையில் யுத்த்த்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். அவர்கள் மீண்டும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கவே முயற்சிக்கிறார்கள்…

சிங்கள, தமிழ், முஸ்லிம்களின் பாதுகவலான இருக்கின்ற நான் இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் முளைகொள்ள விடமாட்டேன்.

இன்று நாட்டில் எங்கேயும் போகலாம் வரலாம் அதுதான் யதார்த்தம்.. அதுதான் தேவை………………………” எனக் குறிப்பிட்டார் ஜனாதிபதி.

நினைவு கூரல் விழா நிகழ்ச்சியில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து சிறப்பிக்கின்றனர்… நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

(மாத்தறையிலிருந்து கலைமகன் பைரூஸ் 9:21)


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>