
இந்நிலையில் மாயமான விமானம் தீப்பிடித்து எரிந்ததை பார்த்ததாக இங்கி லாந்தை சேர்ந்த கேத்ரின் டீ என்ற பெண் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'நானும் என் கணவர் மார்க் ஹார்னும் விடுமுறையை கழிக்க சென்றோம். நாங்கள் கொச்சியில் இருந்து தாய்லாந்தில் உள்ள புகெட்டுக்கு படகில் சென்றோம். அப்போது இந்திய பெருங்கடலை கடந்து செல்லும்போது விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததை நான் பார்த்தேன்.'என அவர் கூறியுள்ளார். மாயமான மலேசிய விமானம் சென்ற பாதையில் அவர்களின் படகு சென்றுள்ளதால், தீப்பிடித்து எரிந்த விமானம், மாயமான மலேசிய விமானமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.