
நுவரெலியாவில் வசிக்கும் 31 வயதான மேற்படி சந்தேக நபர் பெண்ணைகளை திருமணம் செய்வதாக கூறி பத்திரிகைகளுக்கு மனமகள் தேவை என விளம்பரம் பண்ணி மீண்டும் அதற்கு பதில் கிடைக்கும் போது தொலைபேசி மூலம் தொடர்பு வைத்து பிறகு சந்தித்து இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு குழந்தையின் தகப்பனான இவர் இவ்வாறான சம்பவங்கள் பற்றி நானுஒயா பொலிஸில் 2 முறைபாடுகளும் கொத்மலை பொலிஸில் 1 முறைபாடும் நுவரெலியா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் கடந்த மாதம் கொழும்பில் ஒரு பெண்ணை கடத்தி அட்டனில் கட்டி வைத்த சம்பவத்திற்கும் மேற்படி சந்தேக நபர்க்கும் சம்பந்தம் இருப்பதாகவும் இந்த சந்தேக நபரோடு மேலும் சில நபர்கள் இருப்பதாகவும் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.


