
மக்களின் கருத்து
"யாரும் சொல்ல ஏலாது நம்மட முல்லைத்தீவுல ஆமி புடிச்சதா? பொலிஸ் புடிச்சதா? இல்லை சி.ஐ.டி புடிச்சதா? யார் புடிச்சது யுத்தம் முடியிர வரைக்கும் யார் புடிச்சது. முல்லைத்தீவிலே யார் புடிச்சது. அது தான் எங்கட கேள்வி. ஆனந்தி தன்ட மனுசனத் தேடுரா எங்கட புள்ளயல தேட இல்லியே. கேட்குராவா கேட்டாச்சரி நாம் ஒத்துக்கொள்கிறோம். நீங்கள் அரசியலுக்காக எங்கட புள்ளயல பயன்படுத்துறீங்க, நீங்கள் உங்கட போராட்டத்திலே தமீழீழம் காணப்போரோம் என்று மேடையில பேசிரீங்கள். எங்களுக்கு தமிழீழம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் ஒற்றுமை தான் வேண்டும்".
இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக மாற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து வெளியிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல்போன தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் பிரசன்னமாகியிருந்த இடத்தில் அமைதியின்மை நிலவியது.