Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

யாழ் வயோதிப பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய ஐவர் கைது!

$
0
0
யாழ். சுதுமலை வடக்கில் நேற்று அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வர்கள் என ஐவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் பிரதேசத்தினைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குமாரலிங்கம் பத்மாவதி (56) என்ற பெண் கொழும்பில் வசித்த நிலையில், சுதுமலை அம்மன் ஆலயத் திருவிழாவிற்காக யாழ்ப்பாணம் வருகை தந்து, சுதுமலை வடக்கிலுள்ள தனது சொந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணுடன் தங்கியுள்ளார்.

ஆலயத்திருவிழா முடிந்து வீட்டில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, நேற்று அதிகாலை வேளையில் வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்து, வீட்டிலிருந்த இரண்டு பெண்களையும் கை, கால்களை கட்டிவிட்டு அவர்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த நகைகளைத் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டு உரிமையாளரான (பத்மாவதி) பெண்ணின் வாயினை துணியால் கட்டியமையினால் அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார். இது தொடர்பிலே குறித்த ஐவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>