Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஞானசாரர் சொன்னது ஒன்று... செய்தது மற்றொன்று! (நேர்காணல்)

$
0
0
தாங்கள் நிறைவேற்றுகின்ற ஒப்பந்தம் யாருடையது?
யாருடையதாக இருந்தாலும் அன்றிலிருந்து நிறைவேற்றியிருப்பது ஒரே ஒப்பந்தம்தான். அதுபற்றி பொதுமக்கள் நன்கு அறிவர்.

அது என்ன ஒரே ஒப்பந்தம் என்பது?
என்னிடம் ஒப்பந்தம் எதுவும் இல்லை. அன்றிலிருந்து நான் குறித்ததொரு கருதுகோளுடன் எழுந்துநின்றுள்ளேன். எந்தப் பக்கத்தில்தான் நான் இருந்தாலும் என்னுடை கருத்தை நான் வெளிப்படுத்துவேன்.

அமைச்சர் ஒருவர் யாரேனும் ஒருவரைத் திட்டுவாராயின் அவர் ஏதோ ஒரு ஒப்பந்தம் அவருடன் சேர்ந்திருக்கின்றது என்று மக்கள் மனதில் எண்ணப்பாடு தோன்றியுள்ளதே?
ழூ அடுத்தவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. என்னைத் தெரிந்தவர்களுக்கு தெரியும். 80 களிலிருந்து நான் எப்படி இருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் ஒருபோதும் நான் ஒப்பந்தமொன்றில் அடிப்படையில் செயற்படுவதாக நினைக்கவே மாட்டார்கள்.

ஆனாலும் பொதுபல சேனா அமைப்பு அப்படிக் கருதுமே?
இல்லை. பொது பல சேனா அமைப்பினர் அவ்வாறு கருத மாட்டார்கள். ஞானசார தேரருக்கு என்னைத் தெரியும். நான் யாருடனும் ஒப்பந்தம் செய்துகொள்பவன் அல்ல என்பது அவருக்குத் தெரியும். என்னுடைய கருத்துக்கள் பற்றியும் அவர் அறிவார். கடந்த காலத்தில் சொன்னவை பற்றியும் செய்தவை பற்றியும் நாம் மறந்துவிடுவோம். நாங்கள் ஒன்றிணைவோம் என்றும் அவர் என்னிடம் சொன்னார்.

எப்போது அப்படிச் சொன்னார்?
இரண்டு வருடங்கள் இருக்கும்…

எதிர்பாராதவிதமாக தாங்கள் பொதுபல சேனா அமைப்புக்கு தற்போது கையை உயர்த்துவது ஏன்?
நான் தொடர்ந்து அவ்வமைப்பு எதிர்ப்புக் காட்டினேன் அல்லவா! அனைத்து அடிப்படைவாத அமைப்புக்களையும் எதிர்ப்பவன் நான். நாங்கள் ஜே.வி.பி அடிப்படைவாதிகளுக்கு எதிராக அச்சமின்றி களத்தில் குதித்தோம். எல்.ரீ.ரீ.ஈ அடிப்படைவாதிகளுக்கு எதிராக எழுந்து நின்றோம். அது முஸ்லிமாக இருக்கட்டும், தமிழர்களாக இருக்கட்டும், சிங்களவர்களாக இருக்கட்டும் எல்லோருக்கும் ஒன்றே. இந்த அடிப்படைவாதத்தால் நாடு அழிவுப்பாதையை நோக்கி நகருமே தவிர முன்னேற்றம் காணாது.

பொது பல சேனாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க பண உதவி செய்தார் என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
அது உண்மையா இல்லை பொய்யா என்று ரவி கருணாநாயக்கவிடம் கேளுங்கள். வேறுமுறையில் சொல்வதற்கு சான்று இல்லை. ரவி கருணாநாயக்க என்னிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். அது பொய்யென்று இதுவரை யாரும் வாய்திறக்கவில்லையே? தேரரும் வெவ்வேறான கருத்துக்கள்தான் சொல்லியிருக்கிறார்.

அது எந்தக் காலப் பகுதியில்?
தொடராக ரவி கருணாநாயக்கதான் பண உதவி செய்தார்.

எதிர்க்கட்சி என்பதனால்தான் தாங்கள் அவ்வாறு சொல்கிறீர்களா?
இல்லவே இல்லை. தற்போது இவர்கள் நாட்டுப் பற்றோடு கதைக்கிறார்கள். நாட்டின் மீது அவ்வளவு அன்புடையவர்கள் யுத்தக் காலப் பகுதியில் எங்கிருந்தார்கள்? சென்ற ஜனாதிபதித் தேர்தல் காலப்பிரிவில் யாருடன் இருந்தார்கள்? முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுடன்தான்.

அவ்வமைப்பில்தானா?
ஆம்….ஆம்…. அந்த பொதுபல சேனா அமைப்பின் முக்கிய உறுப்பினர் டிலன்த விதானகே சரத் பொன்சேக்காவிற்காக பாடுபட்டார். யுத்தக் காலப் பகுதியில் ஞானசாரர் முழுமையாக ஐக்கிய தேசியக் கட்சியுடன்தான் இருந்தார். இவர்களைப் பார்த்து எப்படி தேசாபிமானிகள் என்று சொல்வது?

இன்றும்கூட ரவி கருணாநாயக்க பொதுபல சேனாவுக்கு பண உதவி செய்கின்றாரா?
கொஞ்சம் நாட்கள் முன்புவரை அப்படித்தான் உதவி செய்தார். அண்மையில்தான் அவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்ட முயன்றுவருகின்றார்கள்.

ஆளும் கட்சியினருடன் இருப்பது ஒருபக்கம் இருக்க.. தற்போது ஜனாதிபதியிலிருந்து உயர் மட்டக் குழுவினர் வரை அனைவருடனும் சிநேகிதம் பாராட்டுகிறார்களே…?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இவர்களுக்கு எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. அரசாங்கத்தின் ஒரு சிலருடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது என்று சொல்லத் தெரியவுமில்லை. அதுவரை அவர்கள் ஜனாதிபதியைத் தோற்கடிக்கவே முயன்றார்கள்.

ஜனாதிபதியுடன் தொடர்பில்லை என உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?
ஆம். தெளிவாகச் சொல்கிறேன். ஜனாதிபதியின் எண்ணப்பாடு பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர் அவ்விடயம் தொடர்பில் என்னுடன் தனியாகக் கதைத்திருக்கிறார்.

அரசாங்கத்தின் ஒரு சிலர் என்று யாரைத்தான் சொல்கிறீர்கள்?எனக்கு சொல்லத் தெரியவில்லை.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவா?
இல்லை. அவருக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்தானே. பொதுபல சேனாவிடமும் அதனைச் சொல்லியிருந்தார்தானே.

ஆயினும், பொதுபல சேனாவோடு ஏதோவொரு பெரிய சக்தி உள்ளதை அண்மைய செயற்பாடுகளைக் கொண்டு கண்டுகொள்ளலாம் அல்லவா?
பாதுகாப்புப் பிரிவில் ஒருசிலர் இருக்கின்றார்கள்தானே. இவர்களிடம் உத்தரவு பெற்றுக் கொண்டுதான் இப்படிச் செய்கிறார்கள் போலும். பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களின் உதவி கிடைப்பதனாற்றான் போலும் பாதுகாப்புச் செயலரின் பெயரும் இதனோடு இணைக்கப்படுகிறது.

(தொடரும்) நன்றி - மவ்பிமநேர் கண்டவர் - சாலிக்க விமலசேன (ශාලික විමලසේන)தமிழில் - கலைமகன் பைரூஸ்

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>