Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

இலங்கை தொடர்பிலான விடயங்களில் மூக்கை நுழைக்க மேற்கத்தேயத்திற்கு முடியாது! - உலக அழகுராணி கார்ட்டியா

$
0
0
இலங்கை மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் மேற்கத்தேய நாடுகள் எவ்வித்த் தீர்ப்பும் வழங்க்க் கூடாது எனவும், அது வேண்டத்தகாத வேலை எனவும் 2013 மிஸ் ஏர்த் எயார் எனும் உலக அழகிப் போட்டியில் தெரிவான கர்ட்டியா வெக்னர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தான் சுற்றுலா மேற்கொண்டபோது, மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான எந்தவொரு விடயத்தையும் தான் காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பது தொடர்பில் ஐரோப்பா மற்றும் மேற்கத்தேய நாடுகளினால் மேற்கொள்ளப்படுகின்ற விமர்சனங்கள் தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர், “என்னால் கூறமுடிந்தது என்னவென்றால், ஆசிய நாடுகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. அதேபோல இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் எங்களுக்கும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“எல்லோருக்கும் தங்களுக்கான கலாச்சாரம் ஒன்று உள்ளது. ஐரோப்பியர்களுக்கும் அவர்களுக்கான கலாச்சாரம் உள்ளது. அதுதொடர்பில் இலங்கையர் தெரிந்துகொள்ளாமல் இருக்கலாம்.” என அவர் தெரண தொலைக்காட்சிச் சேவையில் இடம்பெற்ற நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். “இலங்கை இரக்க சுபாவம் கொண்டவர்கள் வாழ்கின்ற நாடு. இலங்கையில் எந்தவொரு கெட்டவிடயத்தையும் நான் காணவில்லை” இலங்கையுடன் தனக்கு அறுபடாத பிணைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அழகுராணி குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டுக்கான தெரணவின் அழகுராணிக்கு கிரீடம் அணிவிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே 2013 அழகுராணி இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

(கேஎப்)

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>