![](http://4.bp.blogspot.com/-mztCddcuU30/U_N-HGDrQ4I/AAAAAAAAZK4/pZbrAUWXy9Q/s320/not%2Ballowed.jpg)
இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அலரி மாளிகையில் நேற்று சந்தித்தபோதே, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவிற்கு இதுவரை சுமார் 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ள தாகவும், முறைப்பாடுகள் ஆராயப்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி தெரிவித்தார். ஆணைக்குழுவின் விசாரiணை கால எல்லை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் நடவடிக்கைகள், நேர்மையாக இடம்பெறுவதாகவும், அதன் ஜனநாயக வட்டத்தை பலப்படுத்துவதற்கு, நடவடி க்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகவியலாளர் களிடம் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருவதாக, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, பிராந்திய ரீதியில் தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு நியமித்த விசாரணைக்குழு உறுப்பினர்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்தார்.