Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

சிராஸ் பிரதி மேயர் அல்ல! எனவே அவருக்கு எப்படி பிரதி மேயரின் அலுவலகத்தினை வழங்க முடியும்? - லியாகத்

$
0
0
கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிபின் பெயர் கல்முனை பிரதி மேயராக இன்று திங்கட்கிழமை வரையிலும் தேர்தல்கள் ஆணையாளரினால் வர்த்தமானி யில் பிரசுரிக்கப்படவில்லை எனவும், சிராஸ் மீராசாஹிப் பிரதி மேயர் அல்ல எனவும், தற்போது அவர் சாதாரண மாநகர சபை உறுப்பினரே ஆவார் என, மாநகர ஆணை யாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் சாதாரண உறுப்பினரான சிராஸ் மீராசாஹிபிற்கு கல்முனை மாநகர சபையில் எப்படி அலுவலகம் வழங்க முடியும் என கல்முனை மாநகர ஆணையாளர் கேள்வி எழுப்பினார். சிராஸ் மீராசாஹிபிற்கு கல்முனை மாநகர சபையில் பிரதி மேயர் அலுவலகம் வழங்கப்படவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் பெயரை மேயராக சிபாரிசு செய்து தேர்தல்கள் செயலகத்துக்கு அறிவித்துள்ளது. எனினும், சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கல்முனை மேயர் என இன்று திங்கட்கிழமை வரையிலும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை.

இதனால் கல்முனை பிரதி மேயரான நிசாம் காரியப்பர் பதில் மேயராகவே தற்போது செயற்படுகின்றார். நிசாம் காரியப்பரின் பெயர் கல்முனை மேயர் என வர்த்தமானி ஊடாக அறிவித்ததன் பின்னரே கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் பதவி வெற்றிடமாகும்.

அதன் பின்னரே பிரதி மேயர் விடயம் தொடர்பில் கலந்துரையாட முடியும். எனினும், அதுவரையிலும் முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் சாதாரண மாநகர சபை உறுப்பினரே ஆவார். சாதாரண ஒரு மாநகர சபை உறுப்பினருக்கு எப்படி பிரதி மேயரின் அலுவலகத்தினை வழங்க முடியும்? இது எந்த வகையில் நியாயமாகும்'என்றும் ஆணையாளர் வினவினார்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>