![](http://2.bp.blogspot.com/-AYPsW9cHIAo/XCaKIkN-HBI/AAAAAAAAuJE/dunSugqtl5w4AyqMEQ4yZFhhEMptjirGwCLcBGAs/s200/ranil%2B%25285%2529.jpg)
அங்கு ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இடம்பெற்றது. அதன்போது பிரதேசத்திலுள்ள சகல கிணறுகளிலும் வெள்ள நீர் நிரப்பி நிற்பதனால் அது குடிநீருக்கு உகந்ததல்ல என்றும் கிணறுகள் இறைக்கப்பட்டு சுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் வேண்டுதல் விடுக்கப்பட்டது.
இவ்விடயத்தை கருத்திலெடுத்த பிரதமர் 200 நீர் இறைக்கும் இயந்திரங்களை உடனடியாக இராணுவத்தினருக்கு வழங்குவதாகவும் அவர்கள் மக்களது கிணறுகளை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் கூறினார். அவ்வேளையில் திடிரென குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இராணுவத்தினரை கொண்டு அரசாங்கம் சகல விடயங்களையும் மேற்கொள்ளாது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ள பிரதேச சபையிடம் பணியை கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு இணங்கிய ரணில் விக்கிரமசிங்க நீர் இறைக்கும் கருவிகளை பிரதேச சபைகளுக்கு வழங்குவதாகவும் ஆட்கள் பற்றாக்குறை காணப்படின் இராணுவதினரின் உதவியினை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்கு நன்றிக்கடனாக சிறிதரனின் வேண்டுதலுக்கு ரணில் விக்கிரமசிங்க இணங்கியமை தொடர்பாக மக்கள் பெரும் அதிருப்தியை தெரிவிக்கின்றனர். பிரதேச சபை ஊழியர்கள் அதிகார தோரணையிலேயே மக்களுடன் அணுகுகின்றனர் என்றும் இயந்திரங்கள் பிரதேச சபைக்குச் சென்றால் சேவைகள் உரிய நேரத்தில் கிடையாது என்றும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
பிரதேச சபையில ஆளணி பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தால் குப்பை கூழங்களை கூட அள்ள முடியாது என மக்களை சிரமத்தில் போடும் பிரதேச சபையினரால் இப்பெரும் சேவையை வழங்க முடியுமா? என்றும் அவர்கள் கேட்கின்றனர்.
குறித்த இயந்திகங்கள் பிரதேச சபைகளுக்கு செல்லும் பட்சத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு முதலுரிமை வழங்கப்படும் என்றும் அதற்காக படிவங்கள் நிரப்பி கொடுத்து காத்திருக்க வேண்டிய நிலைமை தோன்றலாம் என்றும் சந்தேகம் வெளியிடும் மக்கள் இராணுவத்திரிடம் அப்பணி கையளிக்கப்பட்டால் அவர்களிடமுள்ள ஆளணியை கொண்டு எவ்வித பாரபட்சமுமின்றி கிராமம் கிராமமாக ஒரே நேரத்தில் வேலையை செய்து முடிப்பார்கள் என்று தெரிவிக்கின்றனர்.
சிறிதரன் குறித்த பணியை பிரதேச சபைக்கு எடுத்துக்கொண்டுள்ளதன் நோக்கம் தனது தனது சகாக்களை கொண்டு கொள்ளையடிப்பதற்கு என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்: இயந்திரங்களை கொள்வனவு செய்யும்போது அவற்றில் கொமிஸன் வைத்துக்கொள்வதுடன் அதற்கான எரிபொருளிலும் பல லட்சம் ரூபாய்களை அவர்கள் ஆட்டையை போடுவாகள் என்பது திண்ணம்.
வெள்ளப்பெருக்குக்கு உள்ளான இரு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் சிறிதரனின் சகாக்கள். அவர்களை வைத்தே சிறிதரன் கிளிநொச்சியில் பல்வேறு சட்டவிரோ செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் என்பது யாவரும் அறிந்த விடயம்.
காரியாலயத்தில் கொண்டம் பக்கட்டுக்களுடன் பிடிபட்ட சிறிதரனின் நெருங்கிய சகாவான கரைச்சி வேழமாலிகிதன் பிரதேச சபை தவிசாளர் என்ற பல்வேறு பெண்களை துஷ்பிரயோகம் செய்துள்ளபோதும், தமிழரசுக் கட்சி இன்றுவரை வேழமாலிகிதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே மோசடிப்பேர்வழிகளின் கைகளில் இவ்வாறான அத்தியாவசிய மற்றும் அவசரப்பணிகளுக்கான நிவாரண வேலைத்திட்டங்கள் செல்லுமாயின் அவற்றை மக்களால் அனுபவிக்க முடியாதுபோகும் என்பதை கருத்தில்கொண்டு குறித்த இயந்திரங்களை வடமாகாண இராணு தலைமையகத்தில் வைத்தால், மாகாணத்தில் இவ்வாறான அழிவுகள் இடம்பெறும்போது அது பயன்படுத்தப்படலாம் என்றும், மாறாக பிரதேச சபைகளுள் அவை முடக்கப்படக்கூடாது என்றும் மக்கள் எதிர்பார்கின்றனர்.
![](http://2.bp.blogspot.com/-AYPsW9cHIAo/XCaKIkN-HBI/AAAAAAAAuJE/dunSugqtl5w4AyqMEQ4yZFhhEMptjirGwCLcBGAs/s640/ranil%2B%25285%2529.jpg)
![](http://3.bp.blogspot.com/-xuBAakQ9Ue0/XCaKIkWiknI/AAAAAAAAuJM/12uet5IaLsEE7TNc0HrUrEvPwlShPw18ACLcBGAs/s640/ranil%2B%25286%2529.jpg)
![](http://3.bp.blogspot.com/-fVVjVnXFiVA/XCaKIujQDWI/AAAAAAAAuJI/OUZp-s451ig6IyEZSNoWjFrfES1aWg9XwCLcBGAs/s640/ranil%2B%25287%2529.jpg)