![](http://1.bp.blogspot.com/-82UHy5sbgN0/XCoZolypS2I/AAAAAAAAALg/a0WB_sO0tXkIDRGbB7ltzguub-1QtGevwCLcBGAs/s200/9e9136d1a59b09b97d313c92822cb4e8_XL.jpg)
இந்த வருடம் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், அவ்வாறானவர்களுக்கு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.
இந்த மாதம் 15 ஆம் திகதியில் இருந்து நேற்று வரை முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, நாடு முழுவதும் 6 ஆயிரத்து 21 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த காவல்துறைமா அதிபர், இந்த விசேட நடவடிக்கையின் அடுத்த கட்டமாக இன்று இரவு நாடு முழுவதும் மது போதையில் வாகனம் செலுத்துவர்களை கைது செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு விசேட பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.