![](http://2.bp.blogspot.com/-GKs_-yuIfLw/XCov1d1gKuI/AAAAAAAAALs/C81KRPw8DDwUwdHnzfhMrz6NoRPqpn8IwCLcBGAs/s200/Gavel.jpg)
நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் விசாரணைகள் இன்றி, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், ஈவா வணசுந்தர ஆகியோர் ஓய்வு பெற்றதை அடுத்து, பிரதம நீதியரசராக நளின் பெரேரா நியமிக்கப்பட்டார். எனினும் உயர் நீதிமன்றத்தில் இன்னும் 3 வெற்றிடங்கள் நிலவுவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல வழக்குகள் நிலுவையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த வெற்றிடங்களை நிரப்ப உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஜனாதிபதியிடம் தாம் வலியுறுத்தவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.