![](http://4.bp.blogspot.com/-9LTQCkOK3Uc/XCttF0BV6dI/AAAAAAAAANQ/L5xxkVE5dkU5rvj2fP5S2lbodYd3O4DDwCLcBGAs/s200/crime-arrest-handcuffs-jpg.jpg)
கிழக்கின் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை முதலான மாவட்டங்களிலேயே அதிகளவிலான கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்,2018 ஆம் ஆண்டு வரை போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
எனினும் எதிர்வரும் காலங்களில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் பண்டார குறிப்பிட்டுள்ளார்.