
இந்த புதிய தேக அப்பியாச பயிற்சி தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பாடசாலை களினதும் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக இந்த வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இப்பாகமுவ மத்திய மகாவித் தியாலயத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் முன்னெடுக்கப்படும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் பாடசாலை மாணவர்கள் ஏதாவதொரு விளையாட்டில் பங்கேற்கவேண் டியது அவசியம் என அமைச்சரவையினால் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இலவச கல்வி பெறும் ஒவ்வொரு மாணவரும் காலையில் உடற்பயிற்சி பெறவேண்டியது அவசிய மெனவும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.
ஆரோக்கியமான உடல் மற்றும் உள வளம் கொண்ட பரம்பரையினரை உருவாக் குவதே மஹிந்த சிந்தனையின் நோக்கம் என்பதன் காரணமாகவே பாடசாலை மாணவர்களுக்கு தேக அப்பியாசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதென தெரிவித்த அமைச்சர் இந்த வேலை திட்டத்திற்கு அவசியமான வீடியோ இறுவெட்டுகள், இசை நாதம், ஆசிரியர் கையேடு ஆகியன தற்போது அனைத்து பாடசாலை களுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதுடன் ஆசிரியர்களுக்கும் இது தொடர்பிலான பயிற்சிகள் , வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.