Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

சிறீ பரதாலயாவின் ஆண்டு விழா!

$
0
0
'கல்விக்கு உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை'என்பது ஆன்றோர் வாக்கு. நம் நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் இன்று வசிப்போரில் பல்லாயிரக் கணக்கானோர் கல்விக்கு உயிர் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த வகையில் ஐக்கிய இராச்சியத்தின் கவன்ரி மாநகரில் இயங்கும் சிறீ பரதாலயா அக்கடமி என்ற நிறுவனத்தை நடாத்துபவர்கள், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் கல்வி என்ற கொடையை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பல வருடங்களாக இயங்கும் இந்த நிறுவனத்தை சேவை மனப்பான்மையுடனும் வெற்றிகரமானதாகவும் நடத்துபவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் நமது நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது நாமெல்லோரும் பெருமைப்படத்தக்க விடயம்.

கணிதம், விஞ்ஞானம்,ஆங்கிலம் உட்பட்ட பாடங்களுடன் இன்பத் தமிழ் மொழியும் இந்த நிறுவனத்தினால் கற்பிக்கப்படுகின்றது. புலம் பெயர்ந்து கவன்ரியில் வாழும் பல நூறு மாணவர்கள் இந்த நிறுவனத்தில் ஆர்வத்துடன் தமிழ் மொழியைப் பயின்று பலனடைந்து கொண்டிருக்கின்றனர்.

பரத நாட்டியம், இசை போன்ற நுண்கலை வகுப்புக்களையும் சிறீ பரதாலயா நடாத்தி வருகின்றமை சிறப்பம்சமாகும். இந்த வகுப்புக்களில் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்குபற்றி வருகின்றனர்.

இந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் சிறீ பரதாலயாவின் ஆண்டு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

நல்ல விடயங்கள் எங்கு நடந்தாலும் அவை ஊக்குவிக்கப்பட வேண்டும். அந்த வகையில் சிறீ பரதாலயாவின் நற்பணிகளையும் ஊக்குவித்துப் பாராட்ட வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>