Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

மண்டயன்குழு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் இனவாதத்தை தூண்ட முயற்சி: இந்திய நடிகர்களை விஞ்சிவிட்டதாகவும் குற்றச்சாட்டு

$
0
0
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடி சார்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மண்டயன் குழு உறுப்பினர் துரைராஜா ரவிகரன் மக்கள் மத்தியில் இனவாத துவசத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள்தெரிவிக்கின்றனர்.

தனது எம்ரி நயின்ரி மோட்டர் சைக்கிளில் மகனுடன் வலம் வரும் ரவிகரன் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதாக கூறிக் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழுகின்ற சிங்கள மக்களை விரட்ட வேண்டும் என இனவாதம் பேசி மக்களை குழப்பி வருகின்றார். யுத்தத்தின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி வாழ்ந்து வரும் நிலையில் தமது இருப்புக்காக இனவாதத்தைக் கூறி தமிழ் மக்களை திசை திருப்பி வருகின்றார்.

அங்குள்ள சிங்கள மக்களை தமிழ் மக்களும் தானும் இணைந்து அடித்து விரட்டுவதாக ஊடகங்களில் கூறிவருகின்றார். இதனால் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை வலுவடைந்து செல்கின்றது. தற்போது இலங்கையின் எப் பகுதியிலும் வாழக்கூடிய மற்றும் சென்று வரக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் ரவிகரன் போன்றோர் தமது அரசியல் இருப்புக்காக பச்சோந்தித் தனமாக நடந்து கொள்வதும் ஊடகங்களில் அறிக்கை விடுவதும் ஒட்டு மொத்த சிங்கள மக்களையும் தமிழ் மக்கள் எதிர்பது போன்றும் காட்டுவதும் சிங்கள மக்களுடனான இனநல்லுறவுக்கு பாதகமாக அமையும் என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

செயற்பாடுகள் அற்ற இவரது வெட்டி அறிக்கைகள் நடிப்பில் தென்னிந்திய கலைஞர்களை விஞ்சிவிடுவாரா? என எண்ணத் தோன்றுவதாக முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>