Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளை அரசாங்கம் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் - அநுரகுமார

$
0
0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலங்கை அரசாங்கம் பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்த அமர்வுகளை மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் எந்தவொரு நாட்டினாலும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதனை தெரிந்து கொண்டே அரசாங்கம் இவ்வாறு வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ரோமப் பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால் எந்தவொரு நாட்டினாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை;ப பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முறியடிக்கக் கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கும் ஆளுமை இலங்கை ராஜதந்திரிகளுக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான ராஜதந்திரிகள் அரசியல் ரீதியான பின்புலத்தின் அடி;பபடையில் நியமிக்கப்பட்டவர்கள் எனவும், இதனால் அவர்களுக்கு கள நிலவரங்களோ ராஜதந்திர உத்தியோ தெரிந்திருக்க நியாயமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் வலுப்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>