
சில பதாகைகளை காட்சிக்கு வைத்து விட்டு மரத்தில் ஏறி உண்ணாவிரத்தில் ஈடு பட்ட அந்த இளைஞர், தான் நாட்டு ஜனாதிபதியை சந்திக்கும் வரை மரத்தில் இருந்து இறங்க போவதில்லை என தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற கதிர்காம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி சந்திமால் ஜனாதிபதி சந்திக்க ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி குறித்த இளைஞரை தந்திரமான முறையில் மரத்தில் இருந்து இறங்க செய்தார். கதிர்காமம் 20 ஏக்கர் பிரதேசத்தை சேர்ந்த மஹாநாம லொக்குகே ஆராச்சிகே ரோஹித்த என்ற இளைஞரே இவ்வாறு தன்னை கதிர்காமக்கந்தன் என தெரிவித்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மறைந்து போன ஸ்கந்தக குமரன் நானே. உங்கள் அனைவரும் நன்மை செய்வதற்காக இந்த பூமிக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். ஒரே நேரத்தில் இந்த முழு உலகத்தையும் என்னால் அழிக்க முடியும் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகை ஒன்றையும் இளைஞர் காட்சிப்படுத்தியிருந்தார்.

