பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று இரவு 8.40 அளவில வந்த விமானத்தில் ஆரஞ்சு பழத்தை பிளந்து அதற்குள் உள்ளவற்றை அகற்றிவிட்டு அதில் ஹெரோயினை நிரப்பி சூட்சமமான முறையில் கடத்தி வந்த சந்தேகநபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெங்காயப்பை ஒன்றில் இருந்த 40 ஆரஞ்சுப் பழங்களில் 12 இல் இவ்வாறு ஹெரோயின் இருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் இதன் பெறுமதி ஒரு கோடி ரூபா எனத் தெரிவித்த சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி சந்தேகநபர் உறுது மொழியில் பேசுவதாகவும் தெரிவித்தார்.