Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

கல்முனை மாநகர சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதை ஆட்சேபித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)

$
0
0
நேற்று நடைபெற இருந்த கல்முனை மாநகர சபைக் கூட்டம் திடீர் என்று ஒத்திவைக்கப்பட்டதை ஆட்சேபி த்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் இணைந்து மாநகர சபை சபா மண்டபத்துக்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடு பட்டனர்.

நேற்று கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக் கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்தது. கூட்டம் பி.ப 2.30 மணிக்கும் ஆரம்பமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் கூட்டத்துக்கு வந்ததன் பின்னர் திடிரென கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இவர்கள் கோசமிட்டதுடன் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவின் பிரதிகளைக் கிழித்தெறிந் தனர்.

நேற்று சமர்ப்பிக்கப்படயிருந்த வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும் என்று பயந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இவர்கள் குற்றம்சுமத்தினர். அத்துடன் நிலைமையை பொலிஸார் தலையிட்டு கட்டுப்படித்தியத்துடன் முதல்வர் நிஸாம் காரியப்பர் மாநகர சபைக்கூட்ட மண்டபதின் முன்னால் வந்து கூட்டம் ஒரு கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்து விட்டுச்சென்றார்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதி மேயர் சிராஸ் மாநகர சபை உறுப்பினர்களான பிர்தௌஸ், நிசார்டீன், அமீர், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான அமிர்தலிங்கம், விஜயரட்ணம், ஜெயகுமார், கமலநாதன் ஆகியோரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் முபீத் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நபார் உட்பட 10 உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

(இஷாரத்)








Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>